

கொம்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கொம்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கொம்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா? அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கொம்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.
1.என்றைக்கும் பொதுக் கொம்யூட்டர்களில் உங்கள் பாங்க் எக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கொம்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் எக்கவுண்ட் அதற்கான பாஸ்வேட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் எக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு.
2.உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கொம்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் கொப்பி செய்து பின் கொம்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசைக்கில் பின்னில் கூட இருக்கக் கூடாது.
3.பொதுக் கொம்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் போக வாய்ப்புண்டு.
4.பொதுக் கொம்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது Delete All பட்டனைத் தட்டுங்கள்.
5.இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கொம்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும்.பைல்களை அழித்துவிடும்.
