Unlimited Music, Everywhere. Try Rdio for Free.
ooVoo LLC
பிரதான செய்திகள்
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்


























சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்



























பெண்களுக்காக

நான் பத்திரமாக இருக்கிறேன்:கலெக்டரிடம் இருந்து SMS!

அனைவருக்கும் வணக்கம்! உங்கள் ஊரில் இடம்பெறும் சமய,கலாசார நிகழ்வுகள் மற்றும் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி- vettiinayam@hotmail.com, ஸ்கைப் முகவரி:- Vetti.Inayam
Banner

சத்தீஷ்கர் மாநிலம் சிக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட பின்பும் எந்த தகவலும் மாநில அரசு அதிகாரிகளுக்கு வரவில்லை. கடத்தப்பட்டதும் அவரை விடுவிக்க மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதிப்பார்கள்.ஆனால் கடத்தப்பட்ட ஒரு நாள் ஆகியும் எந்த தகவலும் வராததால் சத்தீஷ்கர் மாநில அரசு அதிகாரிகள் கவலை அடைந்தனர். முதல்-மந்திரி ராமன்சிங் அவ்வப்போது அதிகாரிகளை அழைத்து பேசி வருகிறார். ஏதாவது தகவல் வந்ததா என்று கேட்டு வருகிறார்.

சிக்மாவில் இருக்கும் கலெக்டரின் மனைவியிடமும் முதல்-மந்திரி ராமன்சிங் பேசி தைரியமூட்டினார். இந்த நிலையில் இன்று ராய்ப்பூரில் உள்ள உயர் அதிகாரிகளின் செல்போன்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். தகவல் வந்தது. அது கடத்தப்பட்ட கலெக்டரின் செல்போனில் இருந்து வந்திருப்பதை அறிந்ததும் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதில் நான் பத்திரமாக இருக்கிறேன் என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் மற்ற விவரங்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இது கலெக்டரே அனுப்பினாரா அல்லது அவரது செல்போனை வாங்கி மாவோயிஸ்டுகள் அனுப்பினார்களா? என்பது தெரியவில்லை. செல்போன் டவர் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது.

Bookmark and Share
Share and Enjoy:
விளம்பரங்கள்
திரைப்படங்கள்
பிந்திய செய்திகள்
Compare hotel prices and find the best deal - HotelsCombined.com
HP Download StoreCompUSA
Powered By:- Blogger