Unlimited Music, Everywhere. Try Rdio for Free.
ooVoo LLC
பிரதான செய்திகள்
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்


























சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்



























பெண்களுக்காக

தினமும் 10 Liter குளிர்பானம் அருந்திய பெண் மரணம்! (Video இணைப்பு)

அனைவருக்கும் வணக்கம்! உங்கள் ஊரில் இடம்பெறும் சமய,கலாசார நிகழ்வுகள் மற்றும் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி- vettiinayam@hotmail.com, ஸ்கைப் முகவரி:- Vetti.Inayam
Banner

தினமும் 10 லிட்டர் அளவுக்கு கோகாகலா குளிர்பானத்தை குடித்த பெண் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் நடஷா ஹாரிஸ்(வயது 30). எட்டு குழந்தைகளுக்கு தாயான இவர், காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அடிக்கடி, கோககோலா குளிர்பானத்தை பருகி வந்தார்.

ஒரு நாளைக்கு 10 லிட்டர் கோககோலாவை இவர் பல ஆண்டுகளாக குடித்து வந்தார். இதற்கிடையே அவர் கடந்த 2010ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.இவர் திடீரென இறந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு துறை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். நடஷாவின் கணவரை அழைத்து அவரது மனைவி என்னென்ன உணவு பழக்கங்களை கொண்டிருந்தார் என கேட்டனர்.



நடஷா ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 லிட்டர் கோககோலா குடித்ததாகவும், 30 சிகரெட் வரை பயன்படுத்தியதாகவும், ஆனால் குறைவான உணவு மட்டுமே உட்கொண்டு வந்ததாகவும் நடஷாவின் கணவர் கூறினார்.சமீபத்தில் நடஷாவின் மரணம் குறித்த மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தண்ணீராக இருந்தாலும் அது அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலுக்கு கெடுதலை தான் செய்யும். அதிகப்படியான கோககோலாவினால் அவரது உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்து விட்டது.



இதனால் அவருக்கு ரத்த அழுத்தமும், சக்தி குறைவும் ஏற்பட்டுள்ளது. இது தான் அவருக்கு மரணத்தை ஏற்படுத்தி விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோககோலா நிறுவனம் தங்களுடைய குளிர்பானம் மிகவும் பாதுகாப்பானது என அறிக்கை அளித்துள்ளது.

Bookmark and Share
Share and Enjoy:
விளம்பரங்கள்
திரைப்படங்கள்
பிந்திய செய்திகள்
Compare hotel prices and find the best deal - HotelsCombined.com
HP Download StoreCompUSA
Powered By:- Blogger