பில்லா, அசல், மங்காத்தா உள்ளிட்ட அஜீத் படத்தின் கதைகள் நகரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. மேலும் தற்போது வெளியாக இருக்கும் பில்லா-2 திரைப்படத்தின் கதையும் அப்படிதான்.
தொடர்ந்து நகரத்தின் பின்னணியாக கொண்டு கதை அமைவதால் சற்று மாறுதலாக கிராமத்து வேடத்தில் நடிக்க அஜீத் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தன்னுடைய இந்த விருப்பத்தை அஜீத் நண்பர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியானாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.