சீனாவில் தூக்கி எறியப்பட்ட 100 மில்லியன் கைபேசிகளில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி போன்றவைகளும் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு கைபேசிகள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் கைபேசிகள் தூக்கி எறியப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.